ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் : 114தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை ஆசிரியர்கள்; ஆளுக்குப் பத்து சிறுகதைகளாவது, என்பது திட்டம்.
அதன் முதல்படியாக, பத்து சிறுகதை எழுத்தாளர்களது கதைகளை - தனித்தனியாக - ஆடியோ சிடி (எம்.பி.3 வடிவில்) கொடுத்துள்ளோம். முதல் பத்தில் வருபவர்கள்: புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், அ.முத்துலிங்கம், இரா.முருகன், சுப்ரமண்ய ராஜு.
சிறுகதைகள் வாசிப்பது குறைந்து வரும் இந்த சமயத்தில், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
Labels: kizhakkuaudiobooks, Tamil, varamaudiobooks